பல்லடத்தில் அதிகாலையில் காற்றாலை மீது விழுந்த இடி - இயங்காமல் இருந்ததால் விபத்து தவிர்ப்பு

பல்லடம் அருகே கேத்தனூரில் ஆறு வருடங்களாக இயங்காமல் இருந்த காற்றாலை மீது இன்று அதிகாலையில் இடி இறங்கி முழுமையாக பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியது.


திருப்பூர்: இடி விழுந்து பற்றி எரிந்த காற்றாலை இயங்காமல் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கேத்தனூரில் இருந்து மானாசிபாளையம் செல்லும் சாலையில் ஏராளமான காற்றாலைகள் செயல்பட்டு வருகின்றன.



அதில் ஆறு வருடங்களாக இயங்காமல் இருந்த காற்றாலை மீது திடீரென இன்று அதிகாலை இடி இறங்கியதால் காற்றாலை முழுமையாக தீ பற்றி எரிய தொடங்கியது.

இந்த காற்றாலை அமைக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆவதாகவும் கடந்த ஆறு வருடங்களாக காற்றாலை இயங்கவில்லை எனவும் காற்றாலை இயங்காமல் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.



தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த பல்லடம் தீயணைப்பு துறை வீரர்கள் தீயினை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அருகில் வீடுகள், கால்நடைகள் எதுவும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

ஹை டெக் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான இந்த காற்றாலை இயங்காமல் இருந்த நிலையில் அந்த காற்றாலையை அப்புறப்படுத்தாமல் இருந்ததே விபத்துக்கு காரணம் எனவும் இதுபோன்று ஏராளமான காற்றாலைகள் இப்பகுதியில் இயங்காமல் உள்ளதாகவும் இது போன்ற விபத்துக்களை தவிர்க்க உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...