பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் ஓட்டுநர் தொழிற்சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

2019 ஆம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் உள்ளிட்ட தமிழ்நாடு அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பாக கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: ஆட்டோகளுக்கான மீட்டர் கட்டணத்தை உடனடியாக மாற்றி அமைத்திட வலியுறுத்தி கோவையில் போராட்டம்.

தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் இன்று மாநிலம் தழுவிய பொது வேலை நிறுத்தம் மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் 30க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.



மாநிலம் முழுவதும் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் "தமிழக அரசு 2019 மோட்டார் வாகன திருத்த சட்டத்தை தமிழகத்தில் திருத்தங்களோடு அமல்படுத்த வேண்டும், அநியாய ஆன்லைன் அபராதங்களை உடனடியாக கைவிட வேண்டும், செயலி வடிவில் இயங்கும் நிறுவனங்களை முறைப்படுத்த வேண்டும், ஆட்டோகளுக்கான மீட்டர் கட்டணத்தை உடனடியாக மாற்றி அமைத்திட வேண்டும், ஆட்டோக்களை போன்று கால் டாக்சிக்ளுக்கும் கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும், சொந்த பயன்பாட்டு வாகனங்கள் வாடகைக்கு இயக்கப்படுவதை தடுத்து நிறுத்தி ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தையும் தமிழக அரசின் வரி வருவாயை உறுதி செய்ய வேண்டும், பைக் டாக்ஸிகளை தடை செய்ய வேண்டும், தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்" என வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...