வேட்டைக்கும் ரெடி! கோட்டைக்கும் ரெடி! - கோவையில் போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்

லியோ திரைப்படம் நாளை வெளியாக உள்ளநிலையில், வேட்டைக்கும் ரெடி! கோட்டைக்கும் ரெடி! தலைமை செயலக படத்துடன் கோவையில் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி வரவேற்றுள்ளனர்.


கோவை: 86வது வார்டு புல்லுக்காடு பகுதி விஜய் ரசிகர்கள் சார்பில் "தமிழும் தளபதியும் எங்கள் அடையாளம். ஓராயிரம் ஓநாய்களின் ஓலம் ஒரு சிங்கத்தின் கர்ஜனைக்கு ஈடாகாது என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

நடிகர் விஜர் நடிப்பில் லியோ திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு விஜய் ரசிகர்கள், ரசிகர் மன்றத்தினர் கொண்டாட்டங்களில் ஈடுபட துவங்கி உள்ளனர். அதே சமயம் விஜயின் பல்வேறு நலத்திட்டங்கள் அரசியல் ஈடுபாட்டிற்கு உதாரணமாய் விளங்கி வருகிறது. இதுபோன்ற விஜய்யின் அரசியல் முன்னெடுப்புகள், திரைப்பயணங்களை அவரது ரசிகர்கள், ரசிகர் மன்றத்தினர் போஸ்டர்கள் ஒட்டி உணர்வுகளை வெளிபடுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நாளை லியோ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.



அந்த போஸ்டரில் "லியோ வேட்டைக்கும் ரெடி! கோட்டைக்கும் ரெடி! என குறிப்பிட்டு 234 என தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டுள்ளனர்.



அதே போன்று 86வது வார்டு புல்லுக்காடு பகுதி விஜய் ரசிகர்கள் சார்பில் "தமிழும் தளபதியும் எங்கள் அடையாளம்... ஓராயிரம் ஓநாய்களின் ஓலம் ஒரு சிங்கத்தின் கர்ஜனைக்கு ஈடாகாது..." என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...