உடுமலை வட்டார அளவிலான கலைத் திருவிழா நிறைவு - பரிசுகளை அள்ளிய மாணவர்கள்

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் அறிவுறுத்தலின்படி உடுமலையில் 3 நாட்கள் நடைபெற்ற வட்டார அளவிலான கலைத்திருவிழா நிறைவு பெற்றது.


திருப்பூர்: உடுமலையில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளி மாணவர்களிடையே உள்ள கலை இலக்கிய நடன திறமைகளை வெளிக் கொணரும் பொருட்டு கலை திருவிழா மாநிலம் முழுவதும், முதல் கட்டமாக பள்ளி அளவிலும், இரண்டாம் கட்டமாக வட்டார அளவிலும், மூன்றாம் கட்டமாக மாவட்ட அளவிலும், நான்காம் கட்டமாக மாநில அளவிலும் நடத்தப்படுகிறது.



அதன் அடிப்படையில் இந்த கல்வியாண்டுக்கான உடுமலை வட்டார அளவிலான கலைத்திருவிழா கடந்த அக்டோபர் 18, 19, 20 ஆகிய மூன்று நாட்களில் உடுமலை தளி ரோட்டில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.



நிறைவு நாளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான அனைத்து போட்டிகளும் நடைபெற்றது.

உடுமலை வட்டார அளவிலான கலை திருவிழா ஒருங்கிணைப்பாளர் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அப்துல் காதர் அவர்கள் தலைமை தாங்கினார்.

உடுமலை வட்டார கல்வி அலுவலர்கள் சரவணகுமார், மனோகரன், ஆறுமுகம் ஆகியோர் துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினர். குறிப்பாக பேச்சுப்போட்டி, விவாத மேடை, களிமண் உருவங்கள் செய்தல், காய்கறி பொம்மைகள் செய்தல், கிராமிய நடனம், தனி நடனம், செவ்வியல் நடனம், இசை வாய்ப்பாட்டு, கட்டுரை போட்டி, கையெழுத்துப் போட்டி போன்ற போட்டிகள் நடைபெற்றது.



போட்டிகளில் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலுகின்ற சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.



போட்டிகளுக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் செய்திருந்தனர். போட்டி ஒருங்கிணைப்பாளர்களாகவும், நடுவர்களாகவும் உடுமலை வட்டார ஆசிரியப் பெருமக்கள் மிகச் சிறப்பாக பணியாற்றி திறமை வாய்ந்த மாணவர்களை தேர்வு செய்துள்ளனர். நிறைவாக கலைத்திருவிழாவின் வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் ராம் பிரசாத் நன்றி கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...