திருப்பூர் மாநகராட்சி தினசரி பூ மார்கெட்டில் ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம்

ஆயுத பூஜையை முன்னிட்டு, திருப்பூர் மாநகராட்சி தினசரி பூ மார்கெட்டில். பூஜைக்கு தேவையான பூக்கள் மற்றும் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.


திருப்பூர்: திருப்பூர் தினசரி மார்க்எட்டில் மல்லி கிலோ 800 முதல் 1000 ரூபாய் வரையிலும், முல்லை கிலோ 600 ரூபாய்க்கும், செவ்வந்தி கிலோ 250 லிருந்து 300 ரூபாய் வரையிலும், சம்பங்கி கிலோ 250 ரூபாய்க்கும், செவ்வரளி கிலோ 500 ரூபாய்க்கும் விற்பனையானது.

ஆயுதபூஜை பண்டிகையானது, நாளை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. திருப்பூர் தொழில் நகரம் என்பதால் ஆயுதபூஜை பண்டிகையானது விமரிசையாக கொண்டாடப்படும்.



இந்நிலையில் ஆயுத பூஜைக்கு முக்கிய தேவையான பூக்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்க திருப்பூர் மாநகராட்சி தினசரி பூ மார்கெட்டில் பொதுமக்கள் கூட்டமானது அதிகரித்து காணப்பட்டது.



ஆயுத பூஜையால் மல்லி கிலோ 800 முதல் 1000 ரூபாய் வரையிலும், முல்லை கிலோ 600 ரூபாய்க்கும், செவ்வந்தி கிலோ 250 லிருந்து 300 ரூபாய் வரையிலும், சம்பங்கி கிலோ 250 ரூபாய்க்கும், செவ்வரளி கிலோ 500 ரூபாய்க்கும் விற்பனையானது.



மேலும் பூஜைக்கு தேவையான வாழைக்கன்று, பொரி, பழங்கள் உள்ளிட்ட பிற பொருட்களின் விலையும் சற்று அதிகரித்தே காணப்பட்டது. விலை அதிகம் என்றாலும் பொதுமக்கள் பூஜைக்கு தேவையான பொருட்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். பூ மார்கெட்டில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...