திருப்பூர் மாநகராட்சி தினசரி பூ மார்கெட்டில் ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம்

ஆயுத பூஜையை முன்னிட்டு, திருப்பூர் மாநகராட்சி தினசரி பூ மார்கெட்டில். பூஜைக்கு தேவையான பூக்கள் மற்றும் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.


திருப்பூர்: திருப்பூர் தினசரி மார்க்எட்டில் மல்லி கிலோ 800 முதல் 1000 ரூபாய் வரையிலும், முல்லை கிலோ 600 ரூபாய்க்கும், செவ்வந்தி கிலோ 250 லிருந்து 300 ரூபாய் வரையிலும், சம்பங்கி கிலோ 250 ரூபாய்க்கும், செவ்வரளி கிலோ 500 ரூபாய்க்கும் விற்பனையானது.

ஆயுதபூஜை பண்டிகையானது, நாளை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. திருப்பூர் தொழில் நகரம் என்பதால் ஆயுதபூஜை பண்டிகையானது விமரிசையாக கொண்டாடப்படும்.



இந்நிலையில் ஆயுத பூஜைக்கு முக்கிய தேவையான பூக்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்க திருப்பூர் மாநகராட்சி தினசரி பூ மார்கெட்டில் பொதுமக்கள் கூட்டமானது அதிகரித்து காணப்பட்டது.



ஆயுத பூஜையால் மல்லி கிலோ 800 முதல் 1000 ரூபாய் வரையிலும், முல்லை கிலோ 600 ரூபாய்க்கும், செவ்வந்தி கிலோ 250 லிருந்து 300 ரூபாய் வரையிலும், சம்பங்கி கிலோ 250 ரூபாய்க்கும், செவ்வரளி கிலோ 500 ரூபாய்க்கும் விற்பனையானது.



மேலும் பூஜைக்கு தேவையான வாழைக்கன்று, பொரி, பழங்கள் உள்ளிட்ட பிற பொருட்களின் விலையும் சற்று அதிகரித்தே காணப்பட்டது. விலை அதிகம் என்றாலும் பொதுமக்கள் பூஜைக்கு தேவையான பொருட்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். பூ மார்கெட்டில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...