உடுமலையில் சர்வதேச நிலவு நோக்கும் இரவு - மாணவர்கள் ஆர்வம்

சர்வதேச நிலவு நோக்கும் இரவு நாளையொட்டி திருப்பூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளியான உடுமலையில் நிலவு நோக்கு இரவு நடைபெற்றது. அதில் மாணவ மாணவிகளுக்கு வானவியில் பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது.


திருப்பூர்: உடுமலையில் சர்வதேச நிலவு நோக்கும் இரவு நாளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ம் தேதி சர்வதேச நிலவு நோக்கும் இரவாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.



அதன் அடிப்படையில் உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மற்றும் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை, திருப்பூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளி உடுமலையில் நிலவு நோக்கு இரவு நடைபெற்றது.

நிகழ்வுக்கு தலைமை ஆசிரியர் கணேஸ்வரி தலைமை தாங்கினார். உடுமலை சுற்றுச்சூழல் சங்க தலைவர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்நிகழ்வில் உடுமலை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், வானவியல் பற்றியும், வானவியல் சார்ந்த படிப்புகளைப் பற்றியும், வானவியலில் ஆர்வம் உள்ளவர்கள் எவ்வாறு தங்களது மேல்படிப்பினை தேர்வு செய்தால் வருங்காலங்களில் இஸ்ரோ போன்ற நிறுவனங்களில் விஞ்ஞானிகளாக வர முடியும் என்பது பற்றி மாதிரி பள்ளி மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார்.



தொடர்ந்து நிலவைப் பற்றிய 30க்கும் மேற்பட்ட சுவாரஸ்ய தகவல்களை மாணவர்களுக்கு தெரிவித்து, சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எவ்வாறு ஏற்படுகிறது, சந்திராயன் ஒன்று, இரண்டு, மூன்று ஆகியவற்றினுடைய நோக்கம், சந்திராயன்-3 வெற்றி உலக நாடுகளின் வரவேற்பை பெற்றுள்ளது பற்றியும், மங்கள்யான் செயற்கைக்கோள் எவ்வாறு அனுப்பப்பட்டது என்பது பற்றிய செயல்முறை விளக்கம் அளித்தார். தொடர்ந்து மாணவர்கள் கேட்ட பல்வேறு வினாக்களுக்கு பதில் அளித்தார். குறிப்பாக சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை தெரிவித்தார்.

தொடர்ந்து உடுமலை கலிலியோ அறிவியல் கழக உறுப்பினர்கள், ஆசிரியர் சதீஷ்குமார், கல்லூரி மாணவிகள் ஹரிணி, மதுஸ்ரீ ஆகியோர் தொலைநோக்கிகள் வழியே சனிக்கோளினை வளையங்களுடனும், வியாழன் கோளையும், குறிப்பாக நிலவினை அதனுடைய மேடு பள்ளங்களுடன் தெளிவாக மாணவர்களுக்கு காண்பித்தனர்.

மாணவர்களின் பெற்றோர்களும் முதல்முறையாக தொலைநோக்கி வழியே நிலவை கண்டு ரசித்தனர். தமிழ்நாடு அஸ்ட்ரானமிக்கல் சயின்ஸ் சொசைட்டி சார்பாக திருப்பூர் கார்த்திகேயன் கலந்து கொண்டு தொலைநோக்கி பயன்படுத்தி கோள்களையும் நிலவினையும் மாணவர்களுக்கு காண்பித்தார்.

Newsletter

கோவையில் வட்டிப் பணத்தை வசூலிக்க சென்ற பைனான்சியர் கொலை: ராஜஸ்தான் நபர் கைது

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பைனான்சியர் அபுதாகிர் பாஷா கொலை செய்யப்பட்ட வழக்கில், வட்டிக்குப் பெற்ற பணத்தை திரும்பக் கே...

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...