தெலுங்கானா பொறுப்பாளாராக நியமிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் ஹரிஹரசுதன்

அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஊடகத்துறை தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன் தெலுங்கானா மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


கோவை: ஊடகத்துறை தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன், தெலுங்கானா மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

வரும் மாதம் நவம்பர் 30ஆம் தேதி தெலுங்கானா மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி 119 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஹரிஹரசுதன், தெலுங்கானா மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரேவேந்த ரெட்டி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தெலுங்கானா மாநில பொறுப்பாளர் மாணிக்வு தாக்கரே ஒப்புதலுடன் என்னை தெலுங்கானா மாநில தேர்தல் பொறுப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நியமித்துள்ளது.

என்னை நியமனம் செய்ய பரிந்துரை செய்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் ஆன கார்த்தி சிதம்பரம் எம்பி, செகந்திராபாத் பாராளுமன்ற பொறுப்பாளர் ரூபி மனோகரன் எம்எல்ஏ ஆகியோர்க்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். என கூறியுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...