தெலுங்கானா பொறுப்பாளாராக நியமிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் ஹரிஹரசுதன்

அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஊடகத்துறை தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன் தெலுங்கானா மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


கோவை: ஊடகத்துறை தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன், தெலுங்கானா மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

வரும் மாதம் நவம்பர் 30ஆம் தேதி தெலுங்கானா மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி 119 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஹரிஹரசுதன், தெலுங்கானா மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரேவேந்த ரெட்டி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தெலுங்கானா மாநில பொறுப்பாளர் மாணிக்வு தாக்கரே ஒப்புதலுடன் என்னை தெலுங்கானா மாநில தேர்தல் பொறுப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நியமித்துள்ளது.

என்னை நியமனம் செய்ய பரிந்துரை செய்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் ஆன கார்த்தி சிதம்பரம் எம்பி, செகந்திராபாத் பாராளுமன்ற பொறுப்பாளர் ரூபி மனோகரன் எம்எல்ஏ ஆகியோர்க்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். என கூறியுள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...