உடுமலை அரசு மருத்துவமனை அலுவலக சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாயம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட சரவணா வீதியில் அரசு மருத்துவமனை அலுவலகத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலை ஆஸ்பத்திரி அலுவலகத்தின் சுற்றுச்சுவரை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட சரவணா வீதியில் அரசு ஆஸ்பத்திரி அலுவலகம் இயங்கி வருகிறது. பழமை வாய்ந்த இந்த கட்டிடமும் அதன் சுற்றுச்சுவரும் முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளது.

இதன் காரணமாக சுற்றுச்சுவரின் அஸ்திவாரம் வலுவிழந்து சுவர் சாய்ந்த நிலையில் உள்ளது.உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் அந்த சுவற்றை இடித்து ஆற்றக்கோரி கோரிக்கை விடுத்தும் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை. சிறு அலட்சியம் கூட பெரிதளவில் விபத்தை ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் உணரவில்லை.

இதனால் அங்கு நிறுத்தப்படுகின்ற ஆம்புலன்ஸ், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் அலுவலகத்துக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. எனவே சரவணா வீதியில் செயல்பட்டு வரும் உடுமலை ஆஸ்பத்திரி அலுவலகத்தின் சுற்றுச்சுவரை இடித்து அகற்றுவதற்கு முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...