உடுமலை அரசு மருத்துவமனை அலுவலக சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாயம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட சரவணா வீதியில் அரசு மருத்துவமனை அலுவலகத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலை ஆஸ்பத்திரி அலுவலகத்தின் சுற்றுச்சுவரை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட சரவணா வீதியில் அரசு ஆஸ்பத்திரி அலுவலகம் இயங்கி வருகிறது. பழமை வாய்ந்த இந்த கட்டிடமும் அதன் சுற்றுச்சுவரும் முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளது.

இதன் காரணமாக சுற்றுச்சுவரின் அஸ்திவாரம் வலுவிழந்து சுவர் சாய்ந்த நிலையில் உள்ளது.உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் அந்த சுவற்றை இடித்து ஆற்றக்கோரி கோரிக்கை விடுத்தும் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை. சிறு அலட்சியம் கூட பெரிதளவில் விபத்தை ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் உணரவில்லை.

இதனால் அங்கு நிறுத்தப்படுகின்ற ஆம்புலன்ஸ், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் அலுவலகத்துக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. எனவே சரவணா வீதியில் செயல்பட்டு வரும் உடுமலை ஆஸ்பத்திரி அலுவலகத்தின் சுற்றுச்சுவரை இடித்து அகற்றுவதற்கு முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Newsletter

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...