அண்ணாமலைக்கு பேனர் வைக்க மறுப்பு - போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மீது வழக்கு

சூலூரில் என் மண் என் மக்கள் யாத்திரையின் போது அண்ணாமலைக்காக வைக்கப்பட்ட பேனருக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


கோவை: மாவட்ட பொதுச் செயலாளர் சத்தியமூர்த்தி, துணை தலைவர் பரமசிவம், மாவட்ட செயலாளர் சிதம்பரம் ஆகியோர் மீது பொது மக்களுக்கு இடையூறு செய்வது அனுமதி இன்றி போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் என் மண் என் மக்கள் யாத்திரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது அண்ணாமலை வருகைக்காக கருமத்தம்பட்டி பகுதிகளில் பேனர்கள் வைக்கப்பட்டன. இந்த பேனர்களை பொது இடங்களில் வைப்பதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.



இதன் காரணமாக நான்கு ரோட்டில் பாஜகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசாரிடம் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



மேலும் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய மாவட்ட பொதுச் செயலாளர் சத்தியமூர்த்தி, துணை தலைவர் பரமசிவம், மாவட்ட செயலாளர் சிதம்பரம் ஆகியோர் மீது பொது மக்களுக்கு இடையூறு செய்வது அனுமதி இன்றி போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் கருமத்தம்பட்டி டிஎஸ்பி தையல்நாயகி உத்தரவின் பேரில் ஆய்வாளர் அன்னம் வழக்கு பதிவு செய்துள்ளார்.

மேலும் அவர்கள் மூவரையும் நேரில் விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள கண்டித்து பாஜகவினர் சமூக வலைதளங்கள் கண்டன பதிவை பதிவிட்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...