கோவையில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு 15 வருடம் சிறைத்தண்டனை

கோவையில் கடந்த 2006ஆம் ஆண்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு 15 வருட சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கோவை: பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒரு குற்றவாளி உயிரிழந்துவிட்ட நிலையில், மற்றொரு குற்றவாளிக்கு 15 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ரங்கசாமி மகன் முருகேசன் (27) மற்றும் முத்து மகன் சுப்பிரமணி (43) ஆகியோர் கடந்த 2006-ம் ஆண்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முருகேசன் மற்றும் சுப்ரமணி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கோவை மாவட்டம் மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்து பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது.

இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான முருகேசன் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் மற்றொரு குற்றவாளியான சுப்பிரமணிக்கு 15 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 2000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். வழக்கினை புலன் விசாரணை மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் உஷா ஆஜர்படுத்தினார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...