புதர் மண்டிக்கிடக்கும் கொழுமம் ரோடு ரயில்வே சுரங்கப் பாதை - நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

உடுமலை அருகே உள்ள கொழுமம் ரோடு ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிநிற்கும் கழிவு நீர் மற்றும் மண்டிக்கிடக்கும் புதரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: ரயில்வே கேட்டு அருகில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை தற்போது புதர் மண்டி சூழ்ந்து காணப்படுவதால், அவசர தேவைகளுக்கு கூட ரயில்வே சுரங்கப்பாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கொழுமம் ரோடு ரயில்வே கேட் பகுதியில் கொழுமம் குமரலிங்கம் ருத்ரபாளையம் பழனி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.



இந்நிலையில் ரயில்வே கேட்டு அருகில் ரயில்வே சுரங்கப்பாதை ஒன்றும் உள்ளது.



ரயில் வரும் நேரங்களில் தாமதமானால் சுரங்கப்பாதை வழியாக வாகன ஓட்டிகள் செல்வதற்கு அமைக்கப்பட்ட நிலையில், தற்போது புதர் மண்டி சூழ்ந்து காணப்படுகின்றது.



இதனால் அவசர தேவைகளுக்கு ரயில்வே சுரங்கப்பாதையை பயன்படுத்த முடியாத நிலை தற்போது உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள கழிவுநீர் மற்றும் முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...