நமது குப்பை, நமது பொறுப்பு, குப்பைகளை தரம்பிரித்து வழங்குமாறு பொதுமக்களுக்கு கோவை மாநகராட்சி அறிவுரை

கோவை‌ மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டல வார்டு பகுதிகளில்‌ உள்ள வணிக நிறுவனங்கள்‌, கடைகள்‌ மற்றும்‌ நடைபாதை கடைகள்‌ நடத்தும்‌ வியாபாரிகள்‌ தங்கள்‌ கடைகளில்‌ சேகரமாகும்‌ குப்பைகளை தரம்‌ பிரித்து வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க தவறும்‌ பட்சத்தில்‌ திடக்கழிவு மேலாண்மை விதி 2016-ன்படி தினந்தோறும்‌ அபராதம்‌ விதிக்கப்படும்‌ என்று மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌ எச்சரித்துள்ளார்.

கோவை‌ மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டல வார்டு பகுதிகளில்‌ உள்ள வணிக நிறுவனங்கள்‌, கடைகள்‌ மற்றும்‌ நடைபாதை கடைகள்‌ நடத்தும்‌ வியாபாரிகள்‌ தங்கள்‌ கடைகளில்‌ சேகரமாகும்‌ குப்பைகளை தரம்‌ பிரித்து மக்கும்‌ குப்பைகளை பச்சைநிற குப்பைத்‌ தொட்டிகளிலும்‌,‌ மக்காத குப்பைகளை நீல நிற குப்பைத்‌ தொட்டிகளிலும்‌ சேகரித்து மாநகராட்சி தூய்மைப்‌ பணியாளர்களிடம்‌ கொடுக்க வேண்டும்‌.

பச்சை மற்றும்‌ நீல நிற குப்பைத்‌ தொட்டிகளை 30.11.2023 தேதிக்கு முன்பாக கடைகள்‌/ நிறுவனங்களில்‌ முறையாக வைத்து பொதுமக்களுக்கும்‌ வாடிக்கையாளர்களுக்கும்‌ விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்‌. கோவை‌ மாநகரை தூய்மையாக பராமரிக்க தங்களின்‌ பங்களிப்பை முக மலர்ச்சியுடன்‌ செய்து தர கேட்டுக்‌ கொள்ளப்படுகிறீர்கள்‌. தவறும்‌ பட்சத்தில்‌ திடக்கழிவு மேலாண்மை விதி 2016-ன்படி தினந்தோறும்‌ அபராதம்‌ விதிக்கப்படும்‌ என்று அறிவுறுத்தப்படுகின்றார்கள்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மா.சிவகுரு பிரபாகரன்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...