அனுமதியை பெறாமல் தோண்டப்பட்டுள்ள குழிகள் - நிலத்திற்கு சொந்தமான மூதாட்டி துடியலூர் காவல்நிலையத்தில் புகார்

பில்லூர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் பதிப்பதற்காக உரிய இழப்பீட்டினை கொடுத்து விட்டு பணிகளை செய்ய நாங்கள் அனுமதிப்போம் இல்லையென்றால் நாங்கள் பணி செய்ய அனுமதிக்க மாட்டோம் என மூதாட்டி புகார் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை துடியலூர் அருகே உள்ள கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் எந்த இழப்பீடும் வழங்காமலும், முன் அறிவிப்பு இல்லாமலும் பில்லூர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் பதிப்பதற்காக தனது நிலத்தில் குழிகள் தோண்டப்பட்டுள்ளதாக சாவித்திரி அம்மாள் என்ற மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கோவை மாவட்டம், குருடம்பாளையம் ஊராட்சியில், சி ஆர் பி எப் அமைந்துள்ள இடத்திற்கு அருகாமையில் சாவித்திரி அம்மாள் என்ற மூதாட்டிக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கடந்த சனிக்கிழமை அன்று பில்லூர் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக திடிரென குழிகள் தோண்டப்பட்டுள்ளது.



இந்த நிலத்தில் ஆர்ஜிதம் செய்வதற்கு சாவித்திரி அம்மாளுக்கு இதுவரை முதற்கட்ட நோட்டீஸ் கூட வழங்கப்படவில்லை என்றும் மேலும் இவருக்கு இழப்பீடு தொகையோ, அல்லது இழப்பீடு கொடுத்து விடுவோம் என்ற எந்த அத்தாட்சியும் இல்லாமல் இவர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் நிலத்தில் இருந்த கம்பி வேலிகளை உடைத்து ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் குழிகள் தோண்டியுள்ளனர்.

இதற்கு செயற்பொறியாளர் செந்தில் குமார் என்பவர் தான் காரணம் என்றும் அவர் மீதும் பில்லூர் ஒப்பந்ததாரர்கள் மெகா இன்ஜினியரிங் இன்ப்ரா ஸ்ட்ரக்சர் என்ற நிறுவனத்தின் மீதும் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.

மேலும் அவர்கள் கூறுகையில் எங்களுக்கு உரிய இழப்பீட்டினை கொடுத்து விட்டு அவர்கள் பணிகளை செய்ய நாங்கள் அனுமதிப்போம் இல்லையென்றால் நாங்கள் பணி செய்ய அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தனர்.

இது குறித்து செயற்பொறியாளர் செந்தில்குமாரிடம் பேசும்போது டிசம்பர் மாதத்திற்குள் முதலமைச்சர் மூலம் அத்திக்கடவு கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப் பட உள்ளதால் தனக்கு மேல் உள்ள அதிகாரிகளின் உத்தரவின்படி அவர்களது நிலத்தில் குழி தோண்டியதாக தெரிவித்தார்.

Newsletter

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...