தீபாவளி பண்டிகையை ஒட்டி தாராபுரத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பு

தாராபுரத்தில் தீபாவளி கூட்டத்தை 24 மணி நேரமும் கண்காணிக்கும் பணியில் போலிசார் இறங்கியுள்ளனர். காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை பாதுகாப்பு நீடிக்கும் என போலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


திருப்பூர்: தீபாவளி பண்டிகையை ஒட்டி தாராபுரத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பொதுமக்கள் பெரும்பாலும் தீபாவளிக்கு புத்தாடைகள் தங்க நகைகள் பட்டாசுகள் இனிப்புகள் மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் வாங்க தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து தினசரி ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் பெரிய கடை வீதி ஜவுளி கடை வீதி பொள்ளாச்சி ரோடு சின்ன கடை வீதி ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகள் நகைக்கடைகள் மற்றும் மளிகை கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்த கூட்டத்தை தவிர்க்கவும் சீரான போக்குவரத்தை ஏற்படுத்த நகரின் மையப் பகுதியான பூக்கடைக்காரனில் தாராபுரம் கோட்ட போலீஸ் துணை சூப்பர் கலையரசன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன் குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர்கள் பரமசிவம் விஜயகுமார் ஆகியோர் மேற்பார்வையில் சவுக்கு கட்டைகள் பலகைகளால் சாரம் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இப்பகுதியில் 24 மணி நேரமும் 50க்கும் மேற்பட்ட போலீசாருடன் போக்குவரத்தை பொதுமக்கள் நடமாட்டத்தையும் தீவிரமாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலை 6 மணிக்கு தொடங்கும் கண்காணிப்பு பணி இரவு 11 மணி வரை நீடிக்கிறது போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கோர்வையில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடக்காமல் இருக்க பொதுமக்கள் தங்கள் பணம் மற்றும் நகைகள் செல்போன்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...