கோவையில் தேங்கிய மழைநீர் - உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு

வடக்கு கிழக்கு பருவ மழை தீவிரமான நிலையில் கோவையில் பல்வேறு இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியது. மழைநீர் வடிகால் வடிகால் நிரம்பி குப்பைகளோடு தண்ணீர் வடிந்தோடிய நிலையில் மேயர் ஆய்வு செய்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கிய இடங்களைமேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.13க்குட்பட்ட மாணிக்கவாசகர் நகரில் மாண்புமிகு மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு வீடுகளில் தேங்கிய மழைநீரை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார். உடன் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட சங்கனூர் கால்வாய் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் தூர்வாரி, அப்பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலருக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் அறிவுறுத்தினார். உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் க.சிவகுமார், உதவி ஆணையர் ஸ்ரீதேவி, மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட கல்பனா லே-அவுட் பகுதியில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு, இரவு பெய்த மழையில் விழுந்த மரங்களை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மேயர் கல்பனா ஆனந்தகுமார்நேரில் சென்று பார்வையிட்டு, பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...