உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும் கோவையில் தங்கியிருந்த நிலையில், நாடு கடத்தும் (Deportation) நடவடிக்கையின் ஒரு பகுதியாக திருச்சி மற்றும் செய்யாறில் உள்ள சிறப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.
Coimbatore: கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர் N. கண்ணன், இ.கா.ப., உத்தரவின்படி, கோவை மாநகரம் சரவணம்பட்டி பகுதியில் விசா காலம் முடிந்த பின்னரும் முறையான விசா நீட்டிப்பு பெறாமல் சட்டவிரோதமாக தங்கியிருந்த 3 வெளிநாட்டவர்கள் கண்டறியப்பட்டனர்.
உகாண்டா நாட்டைச் சேர்ந்த Prossy Nantale, Betty Nalugwa ஆகிய இரு பெண்களும், ரிவாண்டா நாட்டைச் சேர்ந்த Eliel Sindikubwabo என்ற ஆணும் 09.09.2026 அன்று கைது செய்யப்பட்டு, அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கைக்காக சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர்.
இரு பெண்கள் திருச்சியில் உள்ள வெளிநாட்டவர்களுக்கான சிறப்பு முகாமிலும், ஆண் நபர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் உள்ள சிறப்பு முகாமிலும் அடைக்கப்பட்டு, அடுத்தகட்ட Deportation நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உகாண்டா நாட்டைச் சேர்ந்த Prossy Nantale, Betty Nalugwa ஆகிய இரு பெண்களும், ரிவாண்டா நாட்டைச் சேர்ந்த Eliel Sindikubwabo என்ற ஆணும் 09.09.2026 அன்று கைது செய்யப்பட்டு, அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கைக்காக சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர்.
இரு பெண்கள் திருச்சியில் உள்ள வெளிநாட்டவர்களுக்கான சிறப்பு முகாமிலும், ஆண் நபர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் உள்ள சிறப்பு முகாமிலும் அடைக்கப்பட்டு, அடுத்தகட்ட Deportation நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.