பல்லடத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்ட பயனாளிகளுக்கு வங்கி அட்டை வழங்கும் நிகழ்வு

பல்லடம், சாமளாபுரம், கரடிவாவி, பொங்கலூர் உள்வட்டங்களில் இருந்து 1239 பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வங்கி அட்டை மற்றும் வாழ்த்து மடல்களை அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் வழங்கினர்.


திருப்பூர்: பல்லடத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்ட பயனாளிகளுக்கு வங்கி அட்டை வழங்கும் நிகழ்வில் செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று வழங்கினர்.

கடந்த தேர்தல் அறிக்கையில் அறவித்தது போல அனைத்து மகளிர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமான தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் கடந்த மாதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. 

முதல்கட்டமாக சுமார் 1 கோடி பேர் தேர்வு செய்யப்பட்டு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. இதில் விடுபட்ட மகளிர் மீண்டும் விண்ணப்பித்து இருந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வங்கி அட்டை வழங்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில் இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் வங்கி அட்டை வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.



இந்நிகழ்வில் தமிழ்நாடு செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்தவராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம்,திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பன்னவர், பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 



பல்லடம், சாமளாபுரம், கரடிவாவி, பொங்கலூர் உள்வட்டங்களில் இருந்து 1239 பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வங்கி அட்டை மற்றும் வாழ்த்து மடல்களை அமைச்சர்கள் வழங்கினர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...