தென்னை, வாழை பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள் - இழப்பீடு வழங்க உடுமலை விவசாயிகள் கோரிக்கை

விளைநிலங்களில் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் காட்டு பன்றிகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே தென்னை மற்றும் வாழைப் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்திய நிலையில் உரிய இழப்பீடு வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தற்சமயம் மக்காச்சோளம் தென்னை வாழை உள்ளிட்டு பல்வேறு பயிர்கள் அதிக அளவு சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே இப்பகுதியில் இரவு நேரங்களில் காட்டுப் பன்றிகள் நடமாட்டம் அதிகளவு காணப்படுகின்றது.



மேலும் கூட்டம் கூட்டமாக வரும் காட்டு பன்றிகள் தென்னங்கன்று வாழை தோட்டங்களில் புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட வேளாண் துறையினர் கலாய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் காட்டுப்பன்றி நடமாட்டம் குறித்து சம்பந்தப்பட்ட வனத்துறையினருக்கு காட்டுப் பன்றிகளை விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதால் வனத்துறையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் தற்பொழுது முடிவெடுத்துள்ளார்கள்.



எனவே விளைநிலங்களை தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் காட்டு பன்றிகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...