உதகை- கோத்தகிரி இடையே மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வந்தது. இதனால் சில பகுதிகளில் சிறிய மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது. இதனை தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து அகற்றி போக்குவரத்தை சீர்செய்து வந்தனர்.



இந்நிலையில் இன்று உதகை- கோத்தகிரி சாலையில் பெரிய மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தில் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்த தகவலறிந்த தீயணைப்புத்  துறை அதிகாரிகள் சேகர், சிவகுமார் மற்றும் முரளிதரன் உள்ளிட்ட மேலும் சில தீயணைப்பு வீரர்கள் சாலையில் விழுந்த மரத்தினை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். 



மரம் மிகப்பெரியளவில் இருந்ததால் முதலில் அதன் கிளைகளை அகற்றிய அதிகாரிகள் தொடர்ந்து, மரத்தின் பெரிய பாகத்தை அகற்றி சாலை போக்குவரத்தினை சீர்செய்தனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...