அமராவதி முதலைப் பண்ணை அருகே வனத்துறை சார்பில் சுற்றுச்சூழல் கடை திறப்பு

முதற்கட்டமாக குடிநீர், ஐஸ்கிரீம், தேநீர், மீன் வருவல், ஆனைமலை புலிகள் காப்பக சின்னத்தில் கீ செயின், டீ சர்ட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. வருங்காலங்களில் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் அவர்களது கருத்துக்கேற்ப உணவு வகைகள் மற்றும் கைவினைப் பொருள்கள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலை அருகே அமராவதி அணையின் முதலைப் பண்ணை பகுதியில் சுற்றுச்சூழல் கடை திறக்கப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் கோட்டம், அமராவதி வனச்சரகம் சார்பில் அமராவதி அணை பகுதி அருகே கடந்த 1975 ஆம் ஆண்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் முதலைப்பண்ணை துவக்கப்பட்டது.



இங்கு குட்டிகள் முதல் பெரியது வரை 84 சதுப்பு நில முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அமராவதி வனச்சரகத்தில் கரட்டுப்பதி, பாறையூர், தளிஞ்சி வயல், மஞ்சம்பட்டி உள்ளிட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் அமைந்துள்ளன. மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காக தமிழக அரசு வனத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் அமராவதி முதலை பண்ணை அருகே கரட்டுப்பதியில் 75 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காக சுற்றுச்சூழல் மேம்பாட்டுகுழு அமைக்கப்பட்டு, வனத்துறையுடன் இணைந்து சுற்றுச்சூழல் கடை திறக்கப்பட்டது.

இங்கு முதற்கட்டமாக குடிநீர், ஐஸ்கிரீம், தேநீர், மீன் வருவல், ஆனைமலை புலிகள் காப்பக சின்னத்தில் கீ செயின், டீ சர்ட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. வருங்காலங்களில் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் அவர்களது கருத்துக்கேற்ப உணவு வகைகள் மற்றும் கைவினைப் பொருள்கள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.



சூழல் கடை திறப்பில் ஆனைமலை புலிகள் காப்பக களஇயக்குனர் ராமசுப்பிரமணியம், இணை இயக்குனர் தேவேந்திர குமார் ஆகியோர் பங்கேற்று திறந்து வைத்தனர். இதில் அமராவதி வனச்சரகர் சுரேஷ் உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனர் ராமசுப்பிரமணியம் முதலைப் பண்ணையில் பராமரித்து வரும் முதலைகள் மற்றும் அவற்றிற்கு வழங்கப்படும் உணவு குறித்தும், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகள் குறித்தும் வனத்துறையினரிடம் ஆலோசனை செய்தார்.

மேலும் புதிதாக துவங்கப்பட்டுள்ள சூழல் கடையில் உணவுகளை தரமாகவும், சுகாதாரமாகவும் சுற்றுலா பயணிகள், மாணவர்களின் கருத்துக்களை கேட்டு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வழங்க அறிவுறுத்தினார். தேர்வு விடுமுறை என்பதால் முதலை பண்ணைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Newsletter

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...