புத்தாண்டை முன்னிட்டு நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே வில்வமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

காலை 7 மணியளவில் விநாயகர் பூஜையுடன் தொடங்கிய விழாவில் மகாசங்கல்பம், வேதிகார்ச்சனை, மகா பூர்ணாகுதி மற்றும் தீபாரதனை நடைபெற்றன. தொடர்ந்து ஸ்ரீ வில்வமாரியம்மனுக்கு 54 வகையான மூலிகை பொடிகளால் அபிஷேகம் நடைபெற்றது.


கோவை: கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்துள்ள தெற்குபாளையம் காந்திநகர்-2 உள்ள அருள்மிகு வில்வமாரியம்மன் திருக்கோயிலில் 2024ஆம் ஆண்டு புது வருட பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 7 மணியளவில் விநாயகர் பூஜையுடன் தொடங்கிய விழாவில் மகாசங்கல்பம், வேதிகார்ச்சனை, மகா பூர்ணாகுதி மற்றும் தீபாரதனை நடைபெற்றன. தொடர்ந்து ஸ்ரீ வில்வமாரியம்மனுக்கு 54 வகையான மூலிகை பொடிகளால் அபிஷேகம் நடைபெற்றது.



அதன்பிறகு ஸ்ரீ வில்வமாரியம்மனுக்கு குதிரை வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் சிறப்பு அலங்காரம் மற்றும் மஹா தீபாரதனை நடைபெற்றது.



முன்னதாக பக்தி திரைப்பட இன்னிசை நாதஸ்வரம் கச்சேரி வெகு விமர்ச்சியாக நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் சந்தோஷ்குமார் சிவம் தலைமையில் கோவில் கமிட்டி மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...