மாதம்பட்டி மற்றும் தேவராயபுரம் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு

மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதம்பட்டி மற்றும் தேவராயபுரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை மாவட்டம் மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதம்பட்டி, ஆலாந்துறை, குப்பனூர், கரடிமடை, பூண்டி, செம்மேடு, தீத்திபாளையம், பேரூர், கவுண்டனூர், பேரூர் செட்டிபாளையம், காளம்பாளையம், தொண்டாமுத்தூர், கெம்பனூர், முத்திபாளையம், கலிக்கநாயக்கன்பாளையம், புதுப்பாளையம், தீனம்பாளையம், உலியம்பாளையம், தாளியூர், குளத்துப்பாளையம் மற்றும் மேற்கு சித்திரைச்சாவடி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இதேபோல், தேவராயபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேவராயபுரம், போளுவாம்பட்டி, விராலியூர், நரசீபுரம், காளியண்ணன்புதூர், புத்தூர், தென்னமநல்லூர், கொண்டையம்பாளையம் மற்றும் தென்றல் நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...