பெதம்பம்பட்டியில் ராமர் வேடம் அணிந்து குழந்தைகள் அயோத்தி ராமர் கோவில் பிரசாதம் வழங்கினர்

கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு பாகுபாடின்றி அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென தற்பொழுது அனைவருக்கும் குழந்தைகளுக்கு ராமர் வேடம் அணிந்து அழைப்பிதழ் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டு வருகின்றது என்று இந்து அமைப்பு நிர்வாகி ஜெயபிரகாஷ் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள பெதம்பம்பட்டியில் அயோத்தி ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த சேஷத்ர டிரஸ்ட் வேண்டுகோளுக்கு இணங்க இந்து அமைப்புகள் சார்பில் நால்ரோடு, பொள்ளாச்சி சாலை, தாராபுரம் சாலை பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் அருகில் உள்ள குடியிருப்புகளில் குழந்தைகள் ராமர் வேடம் அணிந்து அயோத்தி ராமர் கோவில் பிரசாதம் மற்றும் அழைப்பிதழ் வழங்கினர்.



அப்போது இந்து அமைப்புகள் சார்பில் ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ ராம் என்று கோசங்கள் இட்டவாறு சென்றனர். மேலும் இந்து அமைப்பு நிர்வாகி ஜெயபிரகாஷ் கூறும் பொழுது, பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின் தற்பொழுது பல வருடங்களுக்குப் பிறகு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகின்ற 22 ஆம் தேதி கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.



இந்த நிலையில் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு பாகுபாடின்றி அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென தற்பொழுது அனைவருக்கும் குழந்தைகளுக்கு ராமர் வேடம் அணிந்து அழைப்பிதழ் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டு வருகின்றது என்று தெரிவித்தார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...