கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவில் அறங்காவலர்கள் முறைகேடு குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம்

கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவில் அறங்காவலர் கிருஷ்ணசாமி மற்றும் மற்றொருவர் முறைகேடு குற்றச்சாட்டில் இந்து அறநிலையத்துறையால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை மதுக்கரை மரப்பாலம் பகுதியில் உள்ள தர்மலிங்கேஷ்வரர் கோவில் அறங்காவலர் கிருஷ்ணசாமி மற்றும் திருமூர்த்தி ஆகிய இருவரையும் இந்து அறநிலையத்துறையினர் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இந்த நடவடிக்கை முறைகேடுகள் நடைபெற்றதாக சி.கே.கண்ணன் என்பவர் கொடுத்த புகாரின் பின்னணியில் எடுக்கப்பட்டது.

விசாரணையில், உண்டியல் பணம் மற்றும் நன்கொடை வசூலில் முறையான கணக்கு இல்லாமை, அரசிடம் அனுமதி பெறாமல் கட்டுமான பணிகள் மேற்கொண்டல், கோவிலுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதும், கையாடல் மூலம் இருப்பதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக, மதுக்கரை நெடுஞ்சாலையில் உள்ள 28 ஏக்கர் நிலம் ரூ.125 கோடி மதிப்பிலானது கோவில் பெயரில் இல்லாமல் இருந்தது மற்றும் இந்த சொத்துகள் மூலம் வருமானம் ஈட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளார் என்பதும் விசாரணையில் வெளிப்பட்டுள்ளது. மேலும், திருமண மண்டபத்தை அன்னதான மண்டபம் என கணக்கு காட்டி, அதிலிருந்து வரும் வருவாயை கையாடல் செய்திருப்பதும் கண்டறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் காரணமாக அறங்காவலர் கிருஷ்ணசாமி மற்றும் திருமூர்த்தி ஆகிய இருவரையும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளார். இந்த நிலையில், கோவிலின் நிதி மற்றும் நிர்வாக செயல்பாடுகளில் காணப்பட்ட குறைபாடுகள் மேலும் ஆழமாக விசாரிக்கப்பட உள்ளது.

Newsletter

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...