ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கி இருப்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்ட நடவடிக்கை - த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கி இருப்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்ட நடவடிக்கை எனவும், இந்த இடைத்தேர்தல் சவாலான தேர்தலாகவும், சுவராஷ்யமான தேர்தலாகவும் இருக்கும் எனவும் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோவை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில் கலந்து கொள்ள வந்த அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர் சந்தித்தார். அப்போது  உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து ஆலோசனை நடத்த மாவட்டம் தோறும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு விரைவாக நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு நிறைய இடங்களை வெல்ல வேண்டும் என்பதே தங்களது விருப்பம் எனவும் அதே வேளையில் ஓருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி  அமைக்கவும் வாய்பிருக்கின்றது எனவும் தெரிவித்தார். மேலும் தமிழக அரசு பெட்ரோல், டீசலுக்கு வாட்வரியை உயர்த்தி இருப்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் உடனடியாக உயர்த்தப்பட்ட வாட் வரியை  திரும்ப பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். பவானி ஆற்றின்  குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் விவகாரத்தில்  மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்த அவர் மத்திய அரசு இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு  கட்டப்பட்ட தடுப்பணைகளை அகற்ற வேண்டும்  என தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கி இருப்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்ட நடவடிக்கை என்று தெரித்த அவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சவாலான தேர்தலாகவும், சுவராஷ்யமான தேர்தலாகவும் இருக்கும் எனவும் தெரிவித்தார். இனிமேல் வருகின்ற பொதுத்தேர்தல்களில் பெரும்பான்மை எந்த அரசியல் கட்சிக்கும் இருக்காது எனவும் அவர் தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானமானது சபையில் இருக்கும் உறுப்பினர்களை பொறுத்து அமையும் எனவும் ஜி.கே.வாசன் தெரித்தார். மேலு, இனிமேல் தன்னுடைய கூட்டங்கள் பட்டாசு வெடித்தல், சால்வை, பொன்னாடை அணிவித்தல் போன்றவற்றை தவிர்க்குமாறு தொண்டர்களுக்கு வலியுறுத்தி இருப்பதாகவும் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...