தாராபுரத்தில் பூர்வகுடி வள்ளுவர் சமுதாயத்தின் சார்பில் திருவள்ளுவர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

தாராபுரத்தில் பூர்வகுடி வள்ளுவர் சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பத்தினர், திருவள்ளுவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இந்தவிழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் பொங்கல் வழங்கப்பட்டது.


திருப்பூர்: அய்யன் திருவள்ளுவரின் 2055 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் வாழும் வள்ளுவர் குல இளைஞர் நலச் சங்கத்தின் சார்பில், சமுதாய பொங்கல் விழா நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பூர்வ குடி வள்ளுவர் சமுதாயத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இச்சமுதாயத்தின் சார்பில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.



அதன் அடிப்படையில் 2024 ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி, தாராபுரத்தில் பூர்வ குடி வள்ளுவர் சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பத்தினர், திருவள்ளுவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.



விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் பொங்கல் வழங்கப்பட்டது. இவ்விழாவினை வாழும் வள்ளுவர் குலஇளைஞர் நலச்சங்கத்தின் தலைவர் ஓம்.பிரகாஷ், துணைத் தலைவர் கார்வேந்தன், செயலாளர் பிரபாகரன், துணைச் செயலாளர் மோகன், பொருளாளர் பிரகாஷ் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...