குருகோபிந் சிங் பிறந்த நாள் விழா மத நல்லிணக்க விழாவாக கோவையில் கொண்டாட்டம்

மத நல்லிணக்க விழாவில், குருகோபிந் சிங் அவர்களின் நினைவாக கலை கலச்சார நிகழ்வுகள் நடைபெற்றன. குழந்தைகளின் நிகழ்ச்சியாக பஜனை பாடல்கள் பாடப்பட்டன. அதனைத்தொடர்ந்து அனைத்து மதத்தினரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினர்.


கோவை: சீக்கியர்களின் புனித அக்மாத குருவான பத்தாவது மதகுரு, குருகோபிந் சிங் அவர்களின் பிறந்தநாள் விழா, சமய சமூக நல்லிணக்க விழாவாக கோவையில் உள்ள குருவாரா சிங் சபாவில் சிறப்பாக நடைபெற்றது.



குருத்வாராவின் தலைவர், செயலாளர் ஆகியோரின் அழைப்பின் பேரில், சர்வ மத தலைவர்கள், பல் சமய அறிஞர்கள், அரசு உயர் அதிகாரிகள், மில்ட்ரி அதிகாரிகள், கோவை மாவட்ட மேஜிஸ்ட்ரேட் அருணாச்சலம், அப்துல் அக்கீம், முகமது அக்கீம், பேராசிரியர் காதர் மொய்தீன், முஜ்ஜின் ரகுமான் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.



இந்த விழா கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இறுதி குருவான குருகோபிந் சிங் அவர்களின் நினைவாக கலை கலச்சார நிகழ்வுகள் நடைபெற்றன.



குழந்தைகளின் நிகழ்ச்சியாக பஜனை பாடல்கள் பாடப்பட்டன. அதனைத்தொடர்ந்து அனைத்து மதத்தினரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினர். கோவை மாநகரில் இந்தவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவினை, குருத்வாராவின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.



இந்தநிகழ்வில், தொல் சமய நல்லுறவு இயக்கத்தினர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பள்ளியில் போதை எதிர்ப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் உள்ள பீளமேடு தொடக்கப்பள்ளியில் போதைப்பொருள் தீமைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்...

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...