குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே மண்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிப்பு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லும் பிரதான சாலையில் குறுந்தாடி என்னும் பகுதியில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் மண் சரிவு ஏற்பட்டது. 



இதனால், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் வரும் வாகனப் போக்குவரத்தும், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லும் வாகனப் போக்குவரத்தும் சுமார் மூன்று மணிநேரம் ஸ்தம்பித்தது.



மண்சரிவு குறித்த தகவலறிந்த குன்னூர் கோட்டாட்சியர் சீதா பிரியா மற்றும் வருவாய் துறை அலுவலர் வசந்த் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதைத்தொடர்ந்து, மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள மண்சரிவினை அகற்றும் பணியில் ஈடுபட்ட தீயனைப்புத் துறையினர் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் சாலையில் இருந்த மண்களை அகற்றினர். இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் போக்குவரத்து சீரடைந்தது.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், கடந்த ஒரு வாரத்திற்கு மூன்பு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேலாக குன்னூர், நீலகிரி, உதகை உட்பட்ட பகுதிகளில் மழை பெய்தது. அதனைத்தொடர்ந்து நிலவிவந்த வெயிலின் காரணமாக மண்ணின் ஈரம் உறிஞ்சப்பட்டதால் தற்போது இவ்வாறான மண் சரிவு ஏற்பட்டுள்ளது' என்றனர்.

முன்னதாக, மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் எவ்வித வாகனங்களும் கடக்காததால் பெரிய அளவிலான உயிர்சேதம் மற்றும் பொருட்சேதங்கள் தடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...