உடுமலை அருகே குழிப்பட்டியில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள சந்தன மரக் கட்டைகளை கடத்த முயன்ற நான்கு பேர் கைது

குழிப்பட்டியைச் சேர்ந்த பச்சையன், எரிசனம்பட்டியைச் சேர்ந்த தினேஷ்குமார், குணசேகரன், நடராஜ் ஆகியோர் சந்தன மரத்தை வெட்டி கடத்தியதை ஒப்புக்கொண்டனர். இது தொடர்பாக வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து சந்தனமரத்தை வெட்டி கேரளாவுக்கு கடத்த முயன்ற நான்கு பேரையும் கைது செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பக வனபகுதியில் அரிய வகை தாவரங்கள் உயிரினங்கள் வனவிலங்குகள், சந்தன மரங்கள் மற்றும் மூலிகை மரங்கள் உள்ளன. இந்த நிலையில் குழிப்பட்டி பகுதியில் உடுமலை வனத்துறையினர் வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நான்கு பேர் கொண்ட கும்பல் சந்தன மரத்தை வெட்டி கடத்தியது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து உடுமலை வனத்துறைக்கு அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது குழிப்பட்டியைச் சேர்ந்த பச்சையன், எரிசனம்பட்டியைச் சேர்ந்த தினேஷ்குமார், குணசேகரன், நடராஜ், ஆகியோர் சந்தன மரத்தை வெட்டியதாக ஒப்புக்கொண்டனர்.



இது தொடர்பாக வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து சந்தனமரத்தை வெட்டி கேரளாவுக்கு கடத்த முயன்ற நான்கு பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பல லட்சம் மதிப்புள்ள எட்டு கிலோ உயர் ரக சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், உடுமலை ஜே.எம்.1 கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைத்தனர். உடுமலையில் சந்தன மரங்களை வெட்டி கேரளா கடத்த ஒன்று நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

Stringent Action for Licence Violations, Coimbatore SP Warns FL-2, FL-3 Bar Owners

At a consultative meeting with owners and management representatives of FL-2 and FL-3 bars, Coimbatore District Superint...

Vinayagar Chathurthi: Special Trains Between Chennai Central and Podanur Announced

It is clear, but I would make it slightly smoother: Special trains between Chennai Central and Podanur, via Jolarpettai,...

ஜனவரி முதல் செப்டம்பர் வரை கோவையில் 132 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

கோவை மாநகரில் 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீத...

Jan to Sep: 132 Offenders Placed Under Preventive Detention in Coimbatore

A total of 132 persons involved in various criminal activities were preventively detained under the Tamil Nadu Preventio...

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...