அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, உடுமலையில் நகர பாஜக சார்பில் கோவில்களில் சிறப்பு வழிபாடு

உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் தலைவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விநாயகர் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட ஐஸ்வர்யா நகர் கற்பக விநாயகர் மற்றும் செளதாம்லேஅவுட், அண்ணா குடியிருப்பு விநாயகர் கோவில், ஏரி பாளையம் தங்காதம்மாள் கோவில், தில்லை நகர் பாபா கோவில்களில் இன்று அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு விநாயகர் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.

இதே போல உழவர் சந்தை முன்பு 2000 பேருக்கு சாம்பார் சாதம் மற்றும் சக்கரை பொங்கல் வழங்கப்பட்டது. உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் தலைவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமரகுரு, மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் ராதிகா, மாவட்ட மகளிர் அணி மாவட்ட செயலாளர் வித்யா, நகர பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், தம்பிதுரை, நகர துணைத்தலைவர் கணேஷ் ஆனந்த், கண்ணப்பன், உமாகுப்புசாமி, நகர செயலாளர் செல்வராஜ், மத்திய நலத்திட்ட பிரிவு நகரத் தலைவர் திருஞானம், மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் குருசாமி, விளையாட்டு துறை நகர தலைவர் வைர பிரகாஷ், உடுமலை வடக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் ஆரியபவன் ரவி, வர்த்தக பிரிவு நகரத் தலைவர் பொன் பெருமாள், நாடார் பேரவை நிர்வாகிகள் சேர்மன் பட்டு ராஜா, தாமோதரன், சக்திவேல் நாடார், குருசாமி, சுடலைமணி, நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...