பாப்பம்பட்டி பிரிவில் சாலையில் போதையில் தாறுமாறாக டாட்டா ஏஸ் வாகனத்தை ஓட்டி சென்றவர்களை பார்த்து மக்கள் அச்சம்

போதையில் டாட்டா ஏஸ் வாகனத்தில் வந்த கௌதம் மற்றும் அவரது நண்பர் இருவரையும் பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது, போதையில் இருந்த கௌதமிடம் அபராத தொகையை கட்டிவிட்டு வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு போலீசாரின் கூறினர்.


கோவை: சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் திருச்சி சாலையில் சூலூர் நோக்கி ஒரு டாட்டா ஏஸ் வாகனம் சென்றது. அந்த வாகனம் சாலையில் தாறுமாறாக சென்றதால் அவ்வழியே சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகள் அலறி அடித்துக் கொண்டு ஒதுங்கி வழி விட்டனர்.

அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் டாடா ஏஸ் வாகனத்தை ஓட்டிய வரை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சூலூர் ரோந்து காவல் வாகன போலீசார் டாட்டா ஏஸ் ஒட்டி வந்த ஓட்டுநரிடம் விசாரித்தனர். அவர் கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்த கௌதம்(27) என்பது தெரியவந்தது.

அந்த டாட்டா ஏஸ் வாகனத்தில் கௌதம் மற்றும் அவரது நண்பர் என இருவர் வந்துள்ளனர். நிற்கவே முடியாத நிலையில் மது போதையில் இருந்த கௌதம் மற்றும் அவரது நண்பரை போலீசார் விசாரித்தனர். மேலும் மது அருந்தியதை உறுதிப்படுத்த போலீசார் கௌதமை பிரித் அனலைசர் கருவியில் ஊதச் கூறினர். அதற்கு போலீசாரிடம் கிண்டலாக ஊது ஊது என்கிறீர்களே இது என்ன மகுடியா ஊதுவதற்கு என கௌதம் கிண்டல் அடித்தார்.

மேலும் கௌதமை போட்டோ எடுக்க போலீசார் முயன்ற போது என்னோட போட்டோவை கூகுளில் தேடிப் பாருங்கள் வரும் என நக்கலாக பேசினார். இதற்கிடையே போலீசார் கௌதமை ரோந்து வாகனத்தில் ஏற்றி சூலூர் காவல் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் மருத்துவ பரிசோதனை செய்து கௌதம் மது அருந்தி இருப்பது உறுதி செய்து அவர் மீது போதையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்தனர்.

அபராத தொகையை கட்டி வாகனத்தை விடுவித்துக் கொள்ளுமாறு போலீசார் அறிவுரை கூறி கௌதமை அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கௌதமின் நண்பர் எதுவுமே தெரியாதபோல் சாலையின் ஓரத்தில் படுத்து போதையில் உறங்கினார். சமீப காலமாக திருச்சி சாலையில் போதையில் வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டுள்ளது.

போலீசாரும் போதை வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. போதையில் வாகனம் ஓட்டினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் என்று அபராத தொகையை உயர்த்தியும் கூட, போதையில் வாகனம் ஓட்டுவோர் அதிகரித்த வண்ணம் உள்ளனர். சாலையில் செல்வோர் இதனால் கலக்கத்துடன் நாம் இன்று வீடு போய் சேருவோமா இல்லையா என்கிற பயத்திலேயே செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...