பொள்ளாச்சியில் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு 74 அடி உயர கொடி கம்பத்தில் தேசிய கொடியேற்றம்

சுதந்திரத்திற்காக போராடிய வீரர்கள், தலைவர்கள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காந்தியடிகள், நேரு, வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகுமுத்துக்கோன், ஜான்சி ராணி லட்சுமி பாய் உட்பட 90 சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


கோவை: நாட்டின் 75 வது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாக நேற்று கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி பகுதியாக பொள்ளாச்சி நகர திமுக சார்பில் 9வது வார்டுக்கு உட்பட்ட சுப்பையா நகர் மைதானத்தில் 75 ஆவது குடியரசு தினவிழாவை முன்னிட்டு 74 அடி உயரம் கொடிக்கம்பம் நடப்பட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டது.

மேலும் நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நகர திமுக செயலாளர் நவநீதி கிருஷ்ணன் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் மூவர்ண பலூன்களை வானில் பறக்க விடப்பட்டனர். அதனை தொடர்ந்து சுதந்திரத்திற்காக போராடிய வீரர்கள், தலைவர்கள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காந்தியடிகள், நேரு, வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகுமுத்துக்கோன், ஜான்சி ராணி லட்சுமி பாய் உள்ளிட்ட 90 சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...