ஆழியார் வால்பாறை சாலையில் காரை இரண்டு நிமிடம் 40 நொடிகளில் 220 மீட்டர் தூரம் இழுத்துச் சென்று ஏழு வயது சிறுவன் சாதனை

நன்கு பயிற்சி பெற்று, மருத்துவரின் உடற்தகுதி சான்றிதழ் பெற்ற சிறுவன் தேவசுகன், இன்று உலக சாதனை படைக்கும் விதமாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் வால்பாறை சாலையில் 900கிலோ எடையுள்ள காரை இழுக்கும் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.


கோவை: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி மாரீஸ்வரி. இவர்களது மகனான தேவசுகன்(வயது7). 5ம் வகுப்பு படித்து வரும் தேவசுகனுக்கு சிறு வயதில் இருந்தே சாதனை படைக்கும் வகையில் சிறுவனின் பெற்றோர்கள் காரை இழுக்கும் வகையில் பயிற்சி அளித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நன்கு பயிற்சி பெற்று, மருத்துவரின் உடற்தகுதி சான்றிதழ் பெற்ற சிறுவன் தேவசுகன், இன்று உலக சாதனை படைக்கும் விதமாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் வால்பாறை சாலையில் 900கிலோ எடையுள்ள காரை இழுக்கும் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.



காரின் முன்புறம் கயிறு கட்டபட்டு 2 நிமிடம் 40 வினாடிகளில் 220மீட்டர் தூரம் இழுத்து சென்று சிறுவன் தேவசுதன் உலக சாதனை படைத்தார். சிறுவனின் இந்த உலக சாதனை சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.

இதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கமும் சோழன் உலக சாதனை நிறுவன அதிகாரிகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். சிறுவன் காரை இழுத்து சென்ற போது அங்கிருந்த பார்வையார்கள் கைதட்டி உற்சாகபடுத்தியதோடு பாராட்டும் தெரிவித்தனர்.



ஏற்கனவே இந்த சிறுவன் மதுரையில் 200மீட்டர் தூரம் காணை இழுத்து சென்று சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...