கராத்தே போட்டியில் பதக்கங்கள் வென்று ஊர் திரும்பிய மாணவர்களுக்கு கோவையில் உற்சாக வரவேற்பு

தமிழ்நாடு அணி சார்பாக கலந்து கொண்ட கோவை மை கராத்தே இன்டர்நேஷனல் கராத்தே பள்ளியை சேர்ந்த 25 மாணவ, மாணவிகள் மூன்று தங்கம், 5 வெள்ளி , 17 வெண்கல பதக்கம் வென்று அசத்தினர். வெற்றி பெற்று கோவை திரும்பிய மாணவர்களுக்கு ரயில் நிலையத்தில் பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


கோவை: குஜராத் மாநிலத்தில் 13 வது தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி அண்மையில் நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், கோவா, குஜராத் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட மாநிலங்களில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.



கட்டா, குமித்தே என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற கராத்தே போட்டியில் சப் ஜூனியர், ஜூனியர், கேடட், சீனியர் அடிப்படையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அணி சார்பாக கலந்து கொண்ட கோவை மை கராத்தே இன்டர்நேஷனல் கராத்தே பள்ளியை சேர்ந்த 25 மாணவ, மாணவிகள் மூன்று தங்கம், 5 வெள்ளி , 17 வெண்கல பதக்கம் வென்று அசத்தினர். வெற்றி பெற்று தற்போது கோவை திரும்பிய மாணவர்களுக்கு ரயில் நிலையத்தில் பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து இதில் வெற்றி பெற்றவர்கள் சர்வதேச அளவில் நடைபெறும் கராத்தே போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...