தேசிய அளவிலான கேலோ இந்தியா களரி பயட்டு விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற மாணவருக்கு உடுமலையில் உற்சாக வரவேற்பு

உடுமலை ஆர்.கே.ஆர் கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு பயிலும் மாணவர் சுர்ஜித் கேலோ இந்தியா களரி பயட்டு போட்டியில் சுவடுகள் பிரிவில் கலந்துகொண்டு, வெள்ளிப் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.


திருப்பூர்: தேசிய அளவிலான கேலோ இந்தியா களறிபயட்டு மற்றும் விளையாட்டு போட்டிகள் திருச்சி அண்ணா உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.



இதில் தமிழகம், கேரளம், புதுச்சேரி, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், டெல்லி, ஹரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உட்பட 16 மாநிலச் சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.



இதில் உடுமலை ஆர்.கே.ஆர் கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு பயிலும் மாணவர் சுர்ஜித் கலந்து கொண்டு கேலோ இந்தியா களரி பயட்டு போட்டியில் சுவடுகள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.



இந்த நிலையில் பள்ளியின் சார்பில் பேண்டு வாத்தியங்கள் முழங்க மாணவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



களரி போட்டியில் தமிழகத்தில் வெள்ளி பதக்கம் வென்ற ஒரே மாணவர் சுர்ஜித் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஏற்கனவே 2021 ஹரியாணை மாநிலத்தில் நடைபெற்ற கேலோ போட்டியில் தங்கப் பதக்கமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. களரி பயட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவரை உடுமலை ஆர்.கே.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.கே. ராமசாமி, செயலாளர் ஆர்.கே.ஆர். கார்த்திக் குமார், பள்ளி முதல்வர் டி.மாலா பயிற்று வித்த சிலம்பம் மற்றும்‌ களறி பயட்டு ஆசான் வீரமணி மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் பயிற்சியாளர் வீரமணி கூறும் பொழுது, தமிழகத்தில் தற்சமயம் களரி போட்டியில் விளையாடுவதற்கு பலர் ஆர்வமாக உள்ளனர். அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்த வேண்டும். மேலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மற்ற மாநிலங்களில் வழங்குவது போல வெற்றி பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...