நடிகர் விஜய் புதிதாக கட்சி தொடங்கியதை தொடர்ந்து திருப்பூரில் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து புதிய பேருந்து நிறுத்தம் அருகே பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி நடிகர் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


திருப்பூர்: நடிகர் விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். இது தொடர்பான ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் தனது கட்சியின் பெயரை நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அதன்படி தமிழக வெற்றி கழகம் என புதிதாக துவங்கப்பட்டுள்ள கட்சிக்கு பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார். இதனை அடுத்து நீண்ட நாட்களாக நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என எதிர்பார்த்து இருந்த அவரது ரசிகர்கள் தமிழக முழுவதும் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர்.



அதன்படி திருப்பூரில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து புதிய பேருந்து நிறுத்தம் அருகே பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



நிகழ்வில் வடக்கு மாவட்ட தொண்டரணி தலைவர் குத்புதின், மாவட்டச் செயலாளர் சின்னதுரை, மாவட்டத் துணைத் தலைவர் அலாவுதீன், மாவட் மாவட்ட அமைப்பாளர் சுப்பிரமணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனகராஜ் மற்றும் சேக் சித்திக் சதக்கத்துல்லா, வாசிம் விக்கி, செல்வா, கார்த்திக், அஜித் குமார் உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் வட்டிப் பணத்தை வசூலிக்க சென்ற பைனான்சியர் கொலை: ராஜஸ்தான் நபர் கைது

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பைனான்சியர் அபுதாகிர் பாஷா கொலை செய்யப்பட்ட வழக்கில், வட்டிக்குப் பெற்ற பணத்தை திரும்பக் கே...

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...