கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குறிஞ்சேரி ஊராட்சியில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு முகாம்

குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ், குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல்கள், மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான ஆவணம் உள்ளிட்டவற்றை கொடுத்து முதல்மைச்சரின் மருத்துவ காப்பீட்டு முகாமில் பொதுமக்கள் பதிவு செய்து கொண்டனர்.


திருப்பூர்: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குறிஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு முகாம் நடைபெற்றது.



அப்போது பொதுமக்கள் குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ், குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல்கள், மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான ஆவணம் உள்ளிட்டவற்றை கொடுத்து பதிவு செய்து கொண்டனர்.



இந்த முகாமில் புதிதாக காப்பீட்டு அட்டை பதிவு செய்பவர்கள், ஏற்கனவே உள்ள மருத்துவ காப்பீட்டு அட்டை புதுப்பித்து கொடுத்தல், காப்பிட்டு அட்டை தவறவிட்டவர்கள், புதிய அட்டை பெறுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது.



இந்த முகாமில் வருவாய்துறை மூலம் வருமானச் சான்றிதழ் உடனடியாக வழங்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். முகாமில் ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி முருகன், உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.எம்.தங்கராஜ் என்ற மெய்ஞானமூர்த்தி உட்பட ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...