உடுமலை பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - நூற்றுக்கு மேற்பட்ட விளம்பர போர்டுகள் பறிமுதல்

நகர அமைப்பு அலுவலர் உதயகுமார் தலைமையில் ஆய்வாளர் செல்வம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கச்சேரி வீதி, வ.ஊ.சி வீதி, சீனிவாச வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் சாக்கடைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டுகள், கூரை தகடுகள், பந்தல்கள் மற்றும் அனுமதி பெறாத விற்பனை வண்டிகள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி பகுதியில் சீனிவாசா வீதி, பசுபதி வீதி, சத்திரம் வீதி, வ உ சி வீதி, கச்சேரி வீதி, வக்கீல் நாகராஜன், வெங்கட கிருஷ்ணா ரோடு, கல்பனா ரோடு மற்றும் ராஜேந்திர ரோடு ஆகிய பகுதிகளில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நகராட்சி ஆணையாளர் பெர்பெற்றி டெரன்ஸ் லியோன் தலைமையில், நகர மன்ற தலைவர் மத்தீன முன்னிலையில் அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



அப்போது மேற்கண்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என முடிவு செய்யப்பட்டு ஆட்டோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று நகர அமைப்பு அலுவலர் உதயகுமார் தலைமையில் ஆய்வாளர் செல்வம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கச்சேரி வீதி, வ.ஊ.சி வீதி, சீனிவாச வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் சாக்கடைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டுகள், கூரை தகடுகள், பந்தல்கள் மற்றும் அனுமதி பெறாத விற்பனை வண்டிகள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நூற்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் சாக்கடைக்கு வெளியே வைத்திருந்த விளம்பர போர்டுகள், சாலை ஓரம் நீண்ட நாள் வைத்திருந்த பிளக்ஸ் பேனர்கள் பறிமுதல் செய்யப்பட்டு நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. சாலையோரம் விளம்பர போர்டுகள் வைத்தால் மீண்டும் பறிமுதல் செய்யபடும் என நகராட்சி அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கபட்டது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...

கோடைக்காலம்: Pothannur வழித்தடத்தில் Mangaluru-Chennai சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு Karnataka மாநிலம் Mangaluru-இல் இருந்து Chennai Egmore-க்கு Pothannur வழித்தடத்தில் சிறப்பு ரயி...