பொள்ளாச்சியில் என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் சார்பாக கொங்கு நாட்டு சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா

விழாவில் ஈரோடு யு.ஆர்.சி கட்டுமான நிறுவன இயக்குனர் தேவராஜனுக்கு, கொங்கு நாட்டு சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. சுசீந்திரன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோருக்கும் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பாக ரத்தினம் விருது வழங்கப்பட்டது.


கோவை: பொள்ளாச்சியில் என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்கள் சார்பில் அமரர் நாச்சிமுத்து கவுண்டர் 75வது ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நிறுவனர் தினத்தையொட்டி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியவர்களுக்கு கொங்கு நாட்டு சாதனையாளர் விருது வழங்கும் விழா மகாலிங்கம் பொறியியல் கல்லூரி நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது.

என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் தலைவர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஈரோடு யு.ஆர்.சி கட்டுமான நிறுவன இயக்குனர் தேவராஜனுக்கு, கொங்கு நாட்டு சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. சுசீந்திரன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோருக்கும் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பாக ரத்தினம் விருது வழங்கப்பட்டது.



என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஹரிஹரசுதன் மற்றும் செயலாளர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.



விழாவில் பேசிய யு.என்.சி. கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தேவராஜன், மாணவர்கள் தங்கள் இலக்கினை நோக்கி விடா முயற்சியுடன் செயல்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு இலக்கையும் தனி கவனம் செலுத்தி இலக்கை அடையும்வரை விடாமுயற்சி செய்து வெற்றியடைய வேண்டும் என கூறினார்.



இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ கல்வி நிறுவனங்களின் மாணவ. மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...