பெரியதடாகம் பகுதியில் உள்ள சுயம்பு நாகாளியம்மன் கோவில் புகுந்து பொருட்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

நேற்று இரவு ஒரு குட்டியுடன் வந்த தாய் யானை பெரியதடாகம் பகுதியில் உள்ள சுயம்பு நாகாளியம்மன் கோவிலின் இரும்பு கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பீரோ உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்திச் சென்றுள்ளது. தகவல் அறிந்து அங்கு வந்த கோவை வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.


கோவை: கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஆனைகட்டி மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவைகள் உணவு தேடி அவ்வப்போது மலை அடிவாரப்பகுதிகளான மாங்கரை, சின்னத்தடாகம், பெரியதடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை உள்ளிட்ட குடியிருப்பு மற்றும் தோட்டங்களில் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேய்தப்படுத்திச் செல்வது வழக்கம்.

அதேபோல் நேற்று இரவு ஒரு குட்டியுடன் வந்த தாய் யானை பெரியதடாகம் பகுதியில் உள்ள சுயம்பு நாகாளியம்மன் கோவில் இரும்பு கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பீரோ உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்திச் சென்றுள்ளது.

தகவல் அறிந்து அங்கு வந்த கோவை வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். காட்டு யானைகள் குடியிருப்புகளுக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...