உடுமலையில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியை தொடங்கி வைத்தார் டிஎஸ்பி சுகுமாறன்

10 வயதிற்கு உட்பட்டோருக்கு சப்ஜுனியர், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவுகளில் நெடுங்கம்பு, நடுங்கம்பு, சுவடுகள், தொடுமுறை என நான்கு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சைலாத் சிலம்பச் சங்கம் நடத்தும் 4-வது ஆண்டு திருப்பூர், கோவை மாவட்ட அளவிலான சைலாத் சிலம்பப் போட்டி நடைபெற்றது. உடுமலை- பொள்ளாச்சி ரோட்டில் உள்ள லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை வளாகத்தில் தொடங்கிய இந்த நிகழ்வுக்கு லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி, அறக்கட்டளை நிறுவனர் கே. ஆர்.எஸ்.செல்வராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஆசான் வீரமணி வரவேற்றார். போட்டியை உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெ.சுகுமாறன் தொடக்கி வைத்தார்.



போட்டிகள் 10 வயதிற்கு உட்பட்ட பிரிவு, சப்ஜுனியர், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவுகளில் நெடுங்கம்பு, நடுங்கம்பு, சுவடுகள், தொடுமுறை என நான்கு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.

இதில் திருப்பூர், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 650 பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் போது எஸ்.எம்.நாகராஜ், சத்யம் பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை திருப்பூர்,கோவை மாவட்ட சைலாத் சிலம்ப சங்கம் மற்றும் லெப்டினென்ட் சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...