கோவை சுப்பிரமணியம்பாளையத்தில் சிகரம் கலைக்குழுவினர் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வள்ளிக் கும்மி பயிற்சி

சுப்பிரமணியம்பாளையத்தில் ஊர் பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கலைக்குழு ஆசிரியர் ஆ.அருண்குமார், வள்ளி கும்மி ஆசிரியர் கிணத்துக்கடவு இரத்தினசாமி வாத்தியார், கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் ரேவதி மற்றும் குழுவினர் தலைமையில் வள்ளி கும்மி பயிற்சி தொடங்கப்பட்டது.


கோவை: கோவை சுப்பிரமணியம்பாளையத்தில் சிகரம் கலைக்குழுவினர் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வள்ளிக் கும்மி மற்றும் ஒயிலாட்ட பயிற்சி வழங்கினர். இதில் 200க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெற்றனர். கோவையில் சிகரம் கலைக்குழுவினர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தங்களது கலைக்குழு வாயிலாக தமிழர்களின் பாரம்பரிய நடனங்களான ஒயிலாட்டம், வள்ளி கும்மி, ஜமாப் மற்றும் காவடியாட்டம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை இலவசமாக அளித்து பல்வேறு இடங்களில் அரங்கேற்றம் நிகழ்த்தி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை வடக்கு மாவட்டம், சுப்பிரமணியம்பாளையத்தில் ஊர் பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கலைக்குழு ஆசிரியர் ஆ.அருண்குமார், வள்ளி கும்மி ஆசிரியர் கிணத்துக்கடவு இரத்தினசாமி வாத்தியார், கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் ரேவதி மற்றும் குழுவினர் தலைமையில் வள்ளி கும்மி பயிற்சி துவங்கப்பட்டது.

தொடர்ந்து ஒயிலாட்டமும் பயிற்றுவிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் 5 வயது முதல் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இந்நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...