உடுமலை பிரதான பைபாஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பைபாஸ் சாலையில் இன்று உடுமலை நகரமைப்பு அலுவலர் உதயகுமார் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை, சர்வே துறை, போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் கடைகளின் முன்பு நீட்டி விடப்பட்டிருந்த பந்தல், விளம்பர பதாகை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் உள்ள உடுமலை-சின்னார் சாலையில் ஆரியபவன் சிக்னல் முதல் போடிபட்டி அண்ணாநகர் லூர்து மாதா பள்ளி வரை, அதே போன்று ராஜேந்திரா சாலையில் தினசரி மார்க்கெட் முதல் தளிரோடு மேம்பால இணைப்பு வரை,மேலும் தாராபுரம் சாலையில் தாஜ் தியேட்டர் முதல் பஸ் நிலையம் ரவுண்டான வரை உள்ள பகுதிகளில் சாலையின் இரண்டு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு உடுமலை நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சார்பில் முடிவு செய்யப்பட்டு நேற்று (22-2-24) வரை கெடு விதிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இன்று முக்கிய சாலையான பைபாஸ் சாலையில் இன்று உடுமலை நகரமைப்பு அலுவலர் உதயகுமார் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை, சர்வே துறை, போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் கடைகளின் முன்பு நீட்டி விடப்பட்டிருந்த பந்தல்,விளம்பர பதாகை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

இதனால் உடுமலை பைபாஸ் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடுமலை பகுதியில் சாலைகளின் இரண்டு புறங்களையும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டுவருகிறது.

மீண்டும் கடைகளுக்கு முன்பு ஆக்கிரமிப்பு மேற்கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உடுமலைப்பகுதியில் பிரதான சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும்பணி நடைபெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...