பொள்ளாச்சி அடுத்த சர்க்கார்பதி அருகே காண்டூர் கால்வாயில் தவறி விழுந்த குட்டியானையை காப்பாற்றிய வனத்துறையினர்


கோவை: பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் கீழ் உள்ள காண்டூர் கால்வாயில் தண்ணீர் குடிப்பதற்காக நேற்றுமாலை இறங்கிய யானை குட்டி ஒன்று தவறி விழுந்தது. இதை காப்பாற்றுவதற்காக தாய் யானையும் கால்வாயில் இறங்கியது. நீண்ட நேரம் போராடியும் தாய் யானை குட்டி யானையை காப்பாற்ற முடியாத நிலையில் அதிக சத்தம் எழுப்பியது.



இது இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி தலைமையில் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது தாயும் குட்டி யானையும் கால்வாயில் இருப்பதை வனத்துறை ஊழியர்கள் பார்த்தனர். குட்டி யானையுடன் தாய் யானை இருப்பதை பார்த்த வனத்துறை ஊழியர்கள் குட்டி யானையை காப்பாற்ற காத்திருந்த நிலையில் தாய் யானை சற்று தொலைவில் சென்றவுடன் கால்வாயில் இறங்கி குட்டி யானையை காப்பாற்றி கரைப்பகுதியில் விட்டனர். இதனை அடுத்து கன்றும் தாயும் மீண்டும் இணைந்து சென்றது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...