தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை பெரும் தேர்வில் வெள்ளியங்காடு அரசு பள்ளியை சேர்ந்த 3 மாணவர்கள் தேர்ச்சி

தேர்வில் வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் கௌரி சங்கர், சூர்யா, பிரனிஷா ஆகிய மூன்று மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வீதம் நான்கு ஆண்டுகளுக்கு உதவித்தொகை அரசாங்கத்தால் வழங்கப்படும்.


கோவை: ஒவ்வொரு வருடமும் எட்டாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான இந்த தேர்வு கடந்த ஜனவரி 2024 மாதம் நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பட்டியல் நேற்று (பிப்.28) வெளியிடப்பட்டது.

அந்த தேர்வில் கோவை மாவட்டம், காரமடை அடுத்துள்ள வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர். இதில் கௌரி சங்கர், சூர்யா, பிரனிஷா ஆகிய மூன்று மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இம்மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ 1000 வீதம் நான்கு ஆண்டுகளுக்கு உதவித்தொகை அரசாங்கத்தால் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...