உடுமலை அருகே அமராவதி நகரில் மாணவனை பிரம்பால் தாக்கிய ஆசிரியர் – காவல்துறை விசாரணை

பயிற்சி மையத்தில் ஆங்கில ஆசிரியர் ராதாகிருஷ்ணன் தேவியின் மகனை பிரம்பால் அடித்ததில் மாணவனுக்கு கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த அமராவதி நகரில் குடியிருந்து வருபவர் தேவி(37). இவரது கணவர் பிரபு ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது காவல் துறையில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது.



அவர்கள் இருவரையும் அமராவதி நகரில் உள்ள விவேகானந்தா பயிற்சி மையத்தில் சேர்த்ததாக தெரிகிறது. இந்த நிலையில் பயிற்சி மைய ஆங்கில ஆசிரியர் ராதாகிருஷ்ணன் என்பவர் தேவியின் மகனை பிரம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் அவருக்கு கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது.



அதைத் தொடர்ந்து தேவி தனது மகனை அமராவதி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார். அத்துடன் அமராவதி நகர் காவல்நிலையத்தில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார்.



அதன் பேரில் தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலாதேவி (பொறுப்பு) தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட மாணவன் தாயார் தேவி வாட்ஸ் அப்பில் பேசிய வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் வருகின்றது.

வீடியோவில் கூறியதாவது, நான் குழந்தைகளை சைனிக் எனப்படும் ராணுவ பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையில் விவேகானந்த பயிற்சி மையத்தில் சேர்த்து இருந்தேன். நான் ஒரு வருடமாக குழந்தைகளை அடிக்க வேண்டாம் என்றும், முடிந்த அளவு படிக்கட்டும் என்றும் கூறியிருந்தேன். நான் சொன்னதையும் கேட்காமல் நேற்று முன்தினம் கோச்சிங் சென்டர் ஆசிரியர் ராதாகிருஷ்ணன் எனது மகனை அடித்து உள்ளார்.

இதனால் எனது மகனுக்கு தலை, கை, கால்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து எனது மகனை அமராவதி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்ததுடன் அமராவதி போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்து உள்ளேன். போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என என்று பாதிக்கப்பட்ட மாணவன் தாய் தேவி வாட்ஸ் அப்பில் பேசிய வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. உடுமலை அருகே மாணவனை பயிற்சி மைய ஆசிரியர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...