கோவை ராமநாதபுரம் ராமகிருஷ்ணாபுரம் ஆரம்பப் பள்ளியில் திமுக சார்பில் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

கோவை மாநகர் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் மயில்சாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், ஜாமென்ட்ரி பாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.


கோவை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு, கோவை, ராமநாதபுரம் ராமகிருஷ்ணாபுரம் ஆரம்பப் பள்ளியில், கோவை மாவட்ட தொண்டரணி சார்பில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (மார்ச்.1) நடைபெற்றது.



இதில் திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., கலந்து கொண்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், ஜாமென்ட்ரி பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான உபகரணங்களை வழங்கி வாழ்த்தினார். கோவை மாநகர் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் மயில்சாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ராமநாதபுரம் பகுதி கழக செயலாளர் ப.பசுபதி, பொதுக்குழு உறுப்பினர்கள் வெ.ந.உதயகுமார், மு.மா.ச. முருகன், மாநகராட்சி பணிகள் குழுத்தலைவர் சாந்தி முருகன் mc., வட்டக்கழகச் செயலாளர் நா.சண்முகசுந்தரம், மாநகர் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் அர்ஜூனன், கண்ணன், திருமூர்த்தி, மாவட்ட சிறுபான்மை நல உரிமைப் பிரிவு இலா.தேவசீலன், பகுதி கழக பொருளாளர் நா.செந்தில்குமார், அருள்குமார், பகுதி துணை செயலாளர்கள் பிரபு, அங்கண்ணன், லாரா பிரேம்தேவ், லட்சுமி மில் சண்முகம், சன் செந்தில், வசந்தகுமார், பழனிச்சாமி, தட்சிணாமூர்த்தி, விமல், ஜி.ஆர். சீனிவாசன் ரவிக்குமார், தங்கராஜ், கணேசன், சண்முகம், வழக்கறிஞர் சக்கரவர்த்தி, வழக்கறிஞர் மனோகரன், வீரமணி, ராஜன், அருணாச்சலம், வேணுகோபால், கருப்புசாமி, தயாளன், சரவணன், பார்வதி, கழக நிர்வாகிகள், திரளான பொது மக்கள், ஆசிரியர், ஆசிரியைகள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...