நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் திமுக நிற்க வேண்டும் என திமுகவினருக்கு ஆசை – கோவையில் அமைச்சர் முத்துசாமி பேட்டி

கோடைகாலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் துறை அதிகாரிகளை அழைத்து பேசியிருக்கிறார். குடிநீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் முத்துசாமி பேசினார். அப்போது அவர் பேசியாதவது, கோவை மாநகராட்சிக்கு உட்பட பகுதிகளில் இன்று 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1178 பணிகள் துவக்கி வைக்கப்படுகிறது. இந்த பணிகள் முடிவு வரும் போது பெரும்பாலான பிரச்சனைகள் தீர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

குடிநீருக்காக சாலைகள் தோண்டப்படும் நிலையில் அதை சரி செய்வதற்காக 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு வந்த பணிகளும் துவக்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி பகுதிகளில் இதே போன்று பணிகள் நடைபெறுகிறது.

கோவை மாநிலத்தில் மிக அதிகமான அக்கறை எடுத்துக்கொண்டு அரசியல் சார்பாக பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கோடைகாலத்தில் வரும் தண்ணீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் துறை அதிகாரிகளை அழைத்து பேசியிருக்கிறார். குடிநீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அணைகளில் தண்ணீர் குறைகிற போது மாற்று ஏற்பாடு செய்யப்படுவது என்பது அதில் பல சிக்கல்கள் இருக்கிறது. வேறு இடத்தில் இருந்து தண்ணீர் எடுக்கும் போது எதிர்ப்பு வருகிறது. இருந்தாலும் மக்களுக்கு குடிநீர் தருவது அத்தியாவசியம் என்ற காரணத்தால் அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்வார்.



பிரதமர் மோடி கொடுக்கிறேன் என்பதை கொடுத்தால் பொதுமக்கள் நம்புவார்கள். அதை இன்னும் தரவில்லை. இது போன்ற குற்றச்சாட்டுகளை இங்கே வந்து பேசுவது பிரதம அமைச்சர் அளவில் இதுபோன்று நாம் பார்த்ததில்லை.

எத்தனையோ பிரதமர்கள் இருந்திருக்கிறார்கள். ஒரு மாநில கட்சியை ஒரு கட்சியின் தலைவரை இவ்வாறு நேரடியாக வந்து இல்லாத குற்றச்சாட்டுகளை அவ்வளவு நாகரிகமானது அல்ல.

அவர் பிரதமராக இருப்பதால் இதற்கு மேல் நாங்கள் கூறுவதும் நாகரீகம் அல்ல. பிரதமர் மோடி அதை அவ்வளவு பெரிய அரசியல் மேடையாக வைத்துக் கொண்டு பேசியிருக்கக் கூடாது- திமுக கொள்ளை அடித்த பணத்தை மக்களிடத்திலேயே ஒப்படைப்போம் என நேற்று பிரதமர் பேசியது தொடர்பாக அமைச்சர் பதிலளித்துள்ளார்.

பிரதமர் தொடர்ச்சியாக தமிழகம் வருவது நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தாது. இந்த பாதிப்புகளை எல்லாம் எதிர்நோக்கி தான் திமுக இருக்கிறது. திமுக எதற்கும் சலித்து போனது இல்லை.

மக்களுக்கு கடுமையாக கடந்த மூன்று ஆண்டுகளாக உழைத்திருக்கிறார் பல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்.

வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத மகளிர் உரிமைத் தொகை, கட்டணமில்லா பேருந்து, கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், நான் முதல்வன் திட்டங்களை முதல்வர் தந்திருக்கிறார்.

இதற்கு மேல் வேறு யாரானும் செய்திருக்கிறார்கள் அல்லது அருகில் உள்ள மாநிலங்களில் செய்திருக்கிறார்கள் என்றால் சொல்லட்டும். மக்களே சொல்லட்டும். கோவையில் திமுக போட்டியிட வேண்டும் என திமுகவினர் விரும்புகிறார்கள் என்ற கேள்விக்கு, தோழமைக் கட்சிகளுடன் தலைமை பேசி வருகிறது. தோழமைக் கட்சிகளின் மற்றும் எங்கள் தலைமை சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு.

கோவையில் திமுக நிற்க வேண்டும் என திமுகவினருக்கு ஆசை உண்டு. அதற்காக கூட்டணியில் சென்றால் உடன்பாட்டில் செல்வது அவ்வாறு சென்றால் 100% இன்று வெற்றி பெறச் செய்ய உழைப்பாளர்கள்.

தலைமை என்ன முடிவெடுக்கிறதோ அதை நாங்கள் அமல்படுத்துவோம். இவ்வாறு அமைச்சர் முத்துசாமி பேசினார்.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...